Monday, December 31, 2012

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!


உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில்,நோயின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமே! இதன் மூலமாக பக்கவிளைவுகள் ஏராளமாக உண்டாகின்றன;பெரும்பாலான முதல் பக்கவிளைவு அலோபதி மருத்துவசிகிச்சையால் அல்சர் உண்டாவதுதான்! இதனால்,கடந்த ஒரு நூற்றாண்டாக நமது நாட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை சில கோடிகளைத் தாண்டும் என்பது கசப்பான நிஜம்!!!

ஆனால்,கடந்த பல நூற்றாண்டுகளாக நமது புராதன மருத்துவமுறைகளான சித்தா,ஆயுர்வேதம்,நியூரோதெரபி போன்றவைகளின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில்,ஒரு நோய் நமது உடலின் எந்தப்  பகுதியில் செயல்படுகிறதோ,அங்கே சித்த/ஆயுர்வேத மருந்துகள் புகுந்து,நோய்க்குக் காரணமான கிரிமிகளை அழித்து வெளியேற்றுவதும்,அப்படி வெளியேற்றியபின்னர்,அந்த உடல் உறுப்பின் உயிர்த்தன்மையை வலிமைப்படுத்துவதும் ஆகும்.இப்படி செயல்படுவதற்கு குறைந்த பட்சமாக 6 மாதமும்;அதிகபட்சமாக 3 ஆண்டுகளும் ஆகும்.அதன்பிறகு அந்த நோய் திரும்பவும் வருவதில்லை;

சித்த,ஆயுர்வேத மருத்துவம் இந்திய மூலிகைகளின் மூலமாக வளர்ந்தது;புராதன சித்தர்களும்,ரிஷிகளும் இந்த மருத்துவமுறைகளில் மிகச்  சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர்.சரி,மூலிகை என்றால் என்ன?
எந்த ஒரு தாவரம் மனிதனின் குறிப்பிட்ட ஒரு அல்லது சில நோயை குணப்படுத்துகிறதோ அது மூலிகை எனப்படும்.மனிதனின் நோயை குணப்படுத்துவது அந்த தாவரத்தின் கனியாக இருக்கலாம்;காய்,இலை,
தண்டு,வேர்,மரப்பட்டை மற்றும் முளைக்கும் திறனுள்ள இணுக்காக இருந்தாலும் அது  மூலிகை என்றே அழைக்கப்படுகிறது.கடவுள் மனிதனுக்கு ஒரு முக்கிய உதவியை இந்த மூலிகை விஷயத்தில் செய்துள்ளார்.அது என்னவெனில்,மனிதனின் எந்த உடலுறுப்பு நோயால் பாதிக்கப்படுமோ,அதே உடலுறுப்பின் வடிவில் அந்த மூலிகையின் குணப்படுத்தும் பகுதி (இலை/மடல்/பழம்) இருக்கும்.இது கடவுளின் ஆசிர்வாதம் என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக நிலவேம்பு அளவற்ற கசப்புத்தன்மையைக் கொண்டது.இதன் மறுபெயர் சிறியாநங்கை ஆகும்.இதன் இலை நமது உடலில் இருக்கும் கணையம் போலவே இருக்கும்;நாம் உண்ணும் உணவினை குளுக்கோஸாக மாற்றும் பணியைச் செய்வது கணையம் ஆகும்.இப்படி குளுகோஸாக மாற்றும் விகிதம் குறைந்தாலும்,அதிகரித்தாலும் அது சர்க்கரை நோயாக மாறிவிடும்.இந்த விகிதத்தை ஒரே மாதிரியாக வைத்திருக்க கணையத்தைத் தூண்டுவது சிறியாநங்கை (நிலவேம்பு)ஆகும்.

அதேபோல,வல்லாரை இலை மனித மூளையின் பக்கவாட்டுவடிவத்தில் இருக்கும்;இது நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

உலகில் பகல் 12 மணி நேரம்,இரவு 12 மணி நேரம் என சமமாக கால அளவு இருக்கும் ஒரே நாடு நமது இந்தியா மட்டுமே!உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இந்த காலநிலைச் சமநிலை கிடையாது.அதனாலேயே உலகநாடுகளில் வேறு எங்குமே இல்லாத அதிசயங்கள் நமது இந்தியாவில் உண்டு.ஆமாம்!இதானலேயே இந்தியாவில் 35,000 மூலிகை இனங்கள் விளைகின்றன.இவற்றில் வெறும் 6000 மூலிகைகள் மட்டுமே மனிதனால் பயிரிட்டு விளைவிக்க முடியும்.

மூலிகைகளைப் பொருத்தவரையிலும் குமரி மாவட்ட வனப்பகுதி,சதுரகிரி வனப்பகுதி,சபரிமலை வனப்பகுதி,கேரளா மாநிலம்,ஜம்மு & காஷ்மீர்,பீகாரின் சுந்தரவனக்காடுகள்,வங்காளத்தின் கங்கைக்கழிமுகப்பகுதி, சேலம்பகுதியில் உள்ள கொல்லிமலைப்பகுதி, இமயமலைக்காடுகள்,ம.பி.யில் இருக்கும் சம்பல் பள்ளத்தாக்கு,நர்மதை நதியோரத்துப் பகுதிகள்,விந்திய சாத்பூரா மலைப்பகுதிகள்,அஸ்ஸாமின் உள்ளடங்கிய பகுதி என நாடு நெடுக மூலிகை வனங்கள் இருக்கின்றன.
சில மூலிகைகளின் பெயர்களை அறிந்துகொள்வோமே!

துளசி,பேய்த்துளசி,நாய்த்துளசி,கருந்துளசி,முப்பிரண்டை,புடலை,பேய்ப்புடலை,கற்றாழை,சிகப்புக்கற்றாழை,சீனித்துளசி,        கருநொச்சி,சிறுகற்றாழை,சிறு ஆவரை,மூக்கண சாரணை,பால்குழை,கருவேப்பிலை,சிறுகுறிஞ்சான்,தான்றிக்காய்,ஜாதிக்காய்,நிலவேம்பு,தூதுவளை,தாளிசப்பத்திரி,
செம்ருத்தி,  கடுக்காய்,மாசிக்காய்,நெல்லி,
பெருநெல்லி,கருநெல்லி,வில்வம், மஹாவில்வம்,செவ்வாழை,
பீநாறிச்சங்கு,நன்னாரி,மதனகாமப்பூ, தண்ணீர்விட்டான்கிழங்கு,சேவல்கொண்டைப்பூ,அவுரி,       பேய்க்கரும்பு,வசம்பு,சித்தரத்தை,காட்டுப்பலா,சதாவரி,       கருதோஷநிவாரணி,அதிமதுரம்,சதாவரி,இலந்தைப்பழம்,     ஜவ்வாது,கீழாநெல்லி,இந்துப்பு,ஊமத்தை,வேம்பு,அமுக்கரா,    கண்வலிக்கிழங்கு,நீர்முள்ளிசமூலம்,வல்லாரை,ஆவாரம்பூ,       அருகம்புல்,ஓமம்,வாசனைப்புல்,நெட்டிலிங்கம்,இஞ்சி,காட்டு இஞ்சி,தாமரை,ரோஜா,ஏலக்காய்,ஜாதிப்பத்திரி,பூமிசர்க்கரக் கிழங்கு,கண்டங்கத்திரி,ஆடுதொடா,சுக்கு,இசப்பாகுல்,       கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி,சீந்தல்கொடி,வெந்தயம்,
நாவல்,நெருஞ்சில், கல்யாணமுருங்கைஇலை,மூக்கடலை,
பூனைக்காலிவிதை,  குங்குமப்பூ,பொன்னாங்கண்ணி,
சர்க்கரைக்கொல்லி,பாகற்காய், நாய்ப்பாலை,மருதம்பட்டை,
மிளகு,வால்மிளகு,திப்பிலி,சீரகம், கருஞ்சீரகம்,கடுகரோகிணி,
சீமைநிலவேம்பு,அசோகப்பட்டை,லோத்திரப்பட்டை,மூசாம்
ம்,திரிபலா,திரிகடுகு,சிவதை,      

காட்டுச்சீரகம்,வாய்விடங்கம்,ஆமணக்கு,புதினா,மருதாணி,    கிராம்பு,வெட்டிவேர்,கிச்சிலிக்கிழங்கு,சித்தரத்தை,           குப்பைமேனி,நீலபுஷ்பம்,முடக்கற்றான்,செவ்வல்லிக்கொடி,   குக்குழு,தகரை,கருசிவத்தை,சிறுநெருஞ்சில்,சிறுபீளை,     பெருநன்னாரி,மாவிலங்கப்பட்டை,ஆதாளை,கண்ணுப்பிள்ள,வசாலை,விருந்தமாலை.

இவை அனைத்தும் நமது நாட்டின் மரபுச்செல்வங்கள் ஆகும்.இந்த மூலிகைகளின் மருத்துவகுணங்களால் நமது நாட்டில் சுமார் 25,000 ஆண்டுகளாக சித்தமருத்துவமும்,ஆயுர்வேத மருத்துவமும் முழுமையான ஆரோக்கியத்தை மனித குலத்துக்குத் தந்துவருகின்றன.வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயர்,தனது ஆளுகைக்குள் இந்தியாவைக்கொண்டு வந்ததும்,தனது அரசியல் செல்வாக்கினால் சித்த,ஆயுர்வேத மருத்துவத்தை நசுக்கிவிட்டு,அந்த இடத்துக்கு தமது மருத்துவமான அலோபதி மருத்துவமுறையைக்கொண்டுவந்துவிட்டனர்.

உலகமயமாக்கலுக்குப் பின்னர்,பயோடெக் நிறுவனங்களும்,மருந்து நிறுவனங்களும் இந்தியாவிலேயே கால்பதிக்கத் துவங்கியிருக்கின்றன.இவைகள் இந்திய மூலிகைகளை தமது அலோபதி மருந்துகளுடன் கலந்து விற்கத்துவங்கியுள்ளனர்.மறுபுறம்,மூலிகைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970களிலிருந்து இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இந்த ஆய்வுமுடிவுகளால்,இந்திய மூலிகைகளுக்கு பன்னாட்டுச் சந்தை உருவாகியிருக்கிறது.இன்று அமுக்கராக்கிழங்கு,சீந்தல்கொடி போன்றவைகள் கலந்த மூலிகை மருந்துகள் மருந்தே உணவு,உணவே மருந்து என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.இவைகள் அலோபதி மருந்துகளை விட பல மடங்கு விலைகுறைவாகவும்,குணப்படுத்தும் வேகம் பல மடங்கு அதிகமாகவும் இருப்பதால்,இவைகளுக்கான சர்வதேசச் சந்தை தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருக்கின்றன.

மூலிகைகளை அப்படியே வெளிநாட்டுக்கு அனுப்பி லாபம் சம்பாதிப்பது குறைந்துகொண்டே வருகிறது;மாறாக,அவைகளை மதிப்பூட்டப்பட்ட(Value added) பொருட்களாக்கி விற்பனை செய்வதால்,இந்திய மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்று பன்னாட்டு நிறுவனங்களாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
மூலிகைகளைக் கொண்டு மூலிகைப் பல்பொடி,மூலிகை உணவுகள்,மூலிகை நொறுக்குத் தீனிகள்(Snacks & Confectionary),மூலிகை எண்ணெய்,மூலிகை வயாக்ரா,மூலிகை வாசனை திரவியம்,மூலிகை குளிர்பானம்,மூலிகை தைலங்கள் என்று தயார் செய்து விற்பனை செய்வோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துவருகிறது.இவ்வாறு தயார் செய்வதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளைச் சொல்லித் தருகின்றன

கோவில் நிலங்கள் தனியார் வசம் தொடர்கிறது.


சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஆன்மிக திருப்பணியை தலையாய கடமையாக கொண்டு, கிராமங்கள் தோறும் ஆலயங்களை எழுப்பினர். கோவிலுக்கு ஊழியம் செய்தவர்களுக்கு "ஊழிய தானமாக' நஞ்சை, புஞ்சை நிலங்களையும் வழங்கினர். "கோவிலில் வழிபாடு செய்யாமல் கடவுளை பட்டினி போடக்கூடாது; கடவுளுக்கு சேவகம் செய்பவர்களும் பசி, பட்டினியால் வாடக்கூடாது' என்பதற்காக மன்னர்கள் கோவிலுக்காக நிலங்களை ஒதுக்கினர்.

சைவ கோவில்களில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், பவுர்ணமி, தைப்பூசம், சஷ்டி வழிபாடு, பங்குனி உத்திரம், வைணவ கோவில்களில் புரட்டாசி வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, திருவோணம், மார்கழி வழிபாடு, சித்திரை திருவிழா... என ஒவ்வொரு விசேஷத்திற்கு தனித்தனியாக நிலங்களை பிரித்து கொடுத்தனர். அந்த நிலங்களை பராமரிப்பதில் கிடைக்கும் நிதியை கொண்டு கோவில் விழாக்களை சிறப்பாக நடத்த, நிலதானம் செய்தனர்.அதேபோன்று, கோவில் குருக்கள், பண்டிதர், ஓதுவார், இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்திற்கு பதிலாக நிலங்கள் ஒதுக்கி கொடுத்தனர். அதில் விவசாயம் செய்து வருவாய் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊழியம் செய்ய வேண்டும். தவிர, நேர்த்திக்கடனாக கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் உள்ளன. கோவில் நிலங்களை அனுபவித்து வந்தவர்கள், அந்த நிலத்தை காலப்போக்கில், தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொண்டனர். நில உரிமை பதிவேடுகள், நில உடமை மேம்பாட்டு திட்டம் (யுடிஆர்) மூலம் மாற்றம் செய்யப்பட்ட போதும், கம்ப்யூட்டர் சிட்டாவாக பதிவேடுகளில் மாற்றம் செய்தபோதும், கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு மாறி விட்டன. பெயர் மாற்றம் செய்ததன் பின்னணியில் அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. எழுதப்படிக்க தெரியாதவர்களின் பெயரில் மாற்றம் செய்த கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாற்றி எழுதி விற்பனை செய்தனர்.மேலும், கோவில் நிலத்தை அனுபவித்து வந்தவர்களின் வம்சாவழிகள், கோவில் திருப்பணிகளை மறந்து அந்த நிலத்தை அவர்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். கடந்த 1963ல் கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயத்து வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் கீழ் கோவில் சேவைக்காக மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த 1996ல் கோவில் நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கோவில் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும். ஆனால், கோவில் நிலத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு விற்று, பணத்தை கோவிலுக்கு செலுத்தியுள்ளனர். அதற்கு வருவாய்த்துறையில் தாசில்தார், துணைக்கலெக்டர் பணியில் இருந்தவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். வருவாய்த்துறை, கோவில் அறங்காவலர் பொறுப்பில் இருந்தவர்கள் சேர்ந்து அந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்து விற்பனை செய்துள்ளனர். அதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அந்த லே-அவுட்டில் இடங்களை இனாமாக ஒதுக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் நிலத்தை விற்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாத போது, நிலத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனால், அதிகாரிகள் துணையோடு 19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 53 சைட்களாக பிரித்து சூறையாடியுள்ளனர். அந்த நிலம் கட்டாயம் கோவிலுக்கு திரும்ப மீட்கப்படும். இவ்வாறு, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிமேலாவது செய்வார்களா?வி.ஏ.ஓ.,க்கள் மூலம் கிராமத்தின் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கோவில் நிலங்களை முழுமையாக கண்டறிய வேண்டும். கண்டறியப்பட்ட கோவில் நிலங்களுக்கு வேலி அமைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அந்த இடங்களில் வருவாயை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கோவில் நிலம் முழுவதும் மீட்கப்பட்டு, வாடகை வசூலிக்கும் போது, ஒவ்வொரு கோவிலின் வருவாயும் உயரும். கோவில் வருவாயை கொண்டு மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலம், வருவாய் இல்லாத கோவில்களை, மற்ற கோவில்களின் வருவாயை கொண்டு மேம்படுத்த வேண்டும்.முதல்வர் ஜெயலலிதா, கோவில் நிலம் மீட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் தலையீடுகளை களைந்து கோவில் நிலங்களை காக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"விசுவாச' அதிகாரிகள்:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனித்து செயல்படும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) வழங்கப்பட்டுள்ளது. நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், நிலத்தை பராமரித்தவர்கள் பெயருக்கு நிலப்பட்டா வழங்கிய போது ஏற்பட்ட குளறுபடிகளால் கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.வருவாய்த்துறையினரின் குளறுபடி, கோவில் நிலங்கள் கைநழுவி செல்ல முக்கிய காரணமானது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவில் நிலங்களை கண்டுபிடித்து, அவற்றை மீட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து வருகிறார்.அந்த நிலங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வேலி அமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையை உடனடியாக வைப்பதில்லை. மேலும், கோவில் நிலங்களுக்கு அதிகபட்சமாக குத்தகை தொகை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் வருவாய் இழப்பும், நிலம் ஆக்கிரமிப்பும் ஏற்படுகிறது.அறநிலையத்துறை அதிகாரிகள் அரசியல் கட்சியினர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து "சன்மானத்திற்கு' விசுவாசமாக செயல்படுகின்றனர். இதனால், கோவில் நிலங்கள் தனியார் வசம் தொடர்கிறது.

thanks:dinamalar 26.6.2012