Sunday, May 5, 2013

உங்களுக்கு இதோ சில டிப்ஸ


நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற வேண்டுமா? 
உங்களுக்கு இதோ சில டிப்ஸ்...

* வீட்டு வேலையைத் தவிர, தங்களால் நிறைய விஷயங்கள் சாதிக்க முடியும் என, பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே, மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

* இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்று ஓர் லட்சியம், கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

* மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்கு திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தை கைவிடாதீர்கள்.

* "ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரி தான். உணர்வுகளை வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர் என்பதே உண்மை. அதற்காக, எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

* நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது, உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்பு கொடுங்கள்.

* நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களை பொறுத்த வரை, "முழுமையானவர்'.

* பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பக்தி செய்வது மிகவும் சுலபம்


கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம்.

நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும்.
ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும்.

வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார். தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. "ஜோதி ஸ்வரூபன்' என்பர். ஜோதி தான் அவனது வடிவம். கடவுள் மன்னிக்கும் குணம் உடையவர். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், உடனே மன்னித்து விடுவான்.

கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்.

அங்கே தான் பல உறவினர், நண்பர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பார்த்த பின் சும்மா இருக்க முடியுமா? குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்... "பெண் கல்யாணம் என்ன ஆயிற்று? பிள்ளை படிப்பு என்ன ஆயிற்று? துபாயில் இருக்கும் பெரிய பையன் பணம் அனுப்புகிறானா?' இப்படி, பலவித குடும்ப விஷயங்கள் கேள்வி - பதிலாக ஆகிவிடுகிறது. அப்புறம் மனதை பகவானிடமே வைப்பது என்பது, எப்படி சாத்தியம். 

சரி, வீட்டிலேயே இருந்து, மனதை, பகவான் பக்கம் திருப்பலாமே என்றால், இது கூட சிலருக்கு சாத்தியமாவதில்லை.
அப்போதும் கூட குடும்ப விவகாரம்... "சின்ன பையன் ஸ்கூல் போனானா, பெரிய பெண் டியூஷனுக்கு போனாளா, இந்த வாரம் ரேஷன் வாங்கியாச்சா? ஸ்டோர்ல பாமாயில் வந்திருக்கா...' என்று எத்தனையோ கேள்வி - பதில்கள். தெய்வ வழிபாடு, பக்தி என்பது ஒரு பகுதி; குடும்பம், குடும்ப விவகாரம் என்பது இன்னொரு பகுதி. இரண்டையும் கலந்தால், பக்திக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குக்கிராமத்தில், ஓட்டு வீட்டில் வள்ளலார் தவம் செய்து முக்தி பெற்றார்.
 
63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், திருவப்பாடி கிராமத்தில் பசுக்களை மேய்த்து, வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன் மீது, பால் கறக்கவிட்டு வணங்கி முக்தி பெற்றார். 

பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து, சிவபெருமானை வழிபட்டு சிவ தரிசனம் பெற்றார். இப்படி பல சரித்திரங்கள் உள்ளன.

ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. 

மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

Friday, April 5, 2013

தியானம் செய்யும் முறை, தியானம் செய்யுங்கள் ..


தியானம் செய்யும் முறை.
தியானம் செய்யும் முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

வயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லதுசின் முத்திரை

யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல்

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும்.

முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி
ஜோதியாகத் தெரியும்.)

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்

நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும்.

கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,

பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில்

தியான நேரத்தை 5 நிமிடங்கள்,

பின் 10 நிமிடங்கள்,

பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்

எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்

ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல்

எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,

தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் ..











தியானம் செய்யும் முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

வயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லதுசின் முத்திரை

யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல்

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும்.

முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி
ஜோதியாகத் தெரியும்.)

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்

நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும்.

கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,

பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில்

தியான நேரத்தை 5 நிமிடங்கள்,

பின் 10 நிமிடங்கள்,

பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்

எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்

ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல்

எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,

தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் ..

Courtesy: Facebook

பதிவுலகம்



ன்றைய தினத்தில் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் இணைய தொழில் நுட்பத்திற்கும், அன்றைய நுட்பத்திற்கும்நிறையவே வித்தியாசம் இருந்துள்ளது. இணைய உலகின் அசுர வளர்ச்சி 1990 களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றும் ஒருமுடிவில்லா நிலை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. இணைய வளர்ச்சியும் பதிவுலக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்றுஇணையான ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால், இணைய மற்றும் பதிவுலக வளர்சியை 1990-க்கு முன்-பின் என்று இருவகையாகப் பிரிக்கலாம். 

ன்று நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் பிளாக்கர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் வோர்ட்பிரஸ்இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொடங்கப்பட்ட தளங்கள். "அப்படியென்றால் அதற்கு முன் யாரும் தங்களதுகருத்துக்களை பரிமாறிக் கொள்ளவில்லையா?" என்றொரு கேள்வி எழலாம். 

Tim Berners-Lee


விடை தேட, 1990ம் ஆண்டிற்கு முன் இருந்து நமது பயணத்தை தொடங்குவோம்.

மெரிக்க ராணுவ முகாம்களுக்குள் ரகசிய கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான தேடலில் இருந்து தொடங்குகிறதுஇணையத்தின் வரலாறு. பின் படிப்படியாக அமெரிக்க அரசு அலுவலகங்களும் சில முக்கியமான பல்கலைக் கழகங்களும்இணையம் மூலம் இணைக்கப்பட்டன. இணையத்தின் தேவை வளர வளர, கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள்பயன்பாட்டிற்கும் இணைய சேவை விரிவுபடுதுத்தப்பட்டது. 

1990க்கு முன் யூஸ்நெட்(Usenet) என்னும் இணைய சேவை மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.யூஸ்நெட் என்பது பல சர்வர்கள் இணைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பப் பின்னல். ஒவ்வொரு சர்வரும் மற்றொன்றுடன்இணைக்கபட்டிருக்கும். விளையாட்டு, அரசியல், சினிமா, வர்த்தகம் என்று பல்வேறு வகையான கருத்துப் பரிமாற்றம் நிகழும்தளமாகவே விளங்கியது. ஒவ்வொரு தனிதனி கலந்துரையாடல் பிரிவுகளையும் "நியூஸ் குரூப்" என்றழைக்கிறார்கள். இக்காலசமூக வலைதளங்களின் முன்னோடியாக இந்த யூஸ்நெட்டைக் குறிப்பிடலாம். 

யூஸ்நெட்டில் உங்கள் கருத்தை பதிவு செய்ய அந்த நியூஸ் குரூப் பெயரையும் இணைத்து பதிவிட வேண்டும். உங்கள் சர்வரில்பதியப்படும் கருத்து சிறிது நேரத்தில் மற்ற சர்வர்களையும், உங்கள் நியூஸ் க்ருப்பை சேர்ந்தவர்களையும் சென்று சேரும்.உங்கள் நியூஸ் குரூப்பில் இருப்பவருடன் மட்டுமே உங்களால் கலந்துரையாட முடியும். மேலும் உங்கள் பதிவுகள் முப்பதுநாட்களுக்குப் பின் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

1990 இன் இறுதியில் டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் www என்றறியப்படும் வோர்ல்ட் வைட் வெப் (World Wide Web)என்னும்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்கிய இணைய வளர்ச்சி இன்றளவும்அதே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இவருடைய மற்ற கண்டுபிடிப்புகளான HTTP, HTMLமற்றும் XML போன்றவை இணைய கட்டமைப்பின் மிக முக்கியமான தூண்கள். 

Justin Hall
ஸ்டின் ஹால் என்னும் அமெரிக்கர் தான் உலகின் முதல் பதிவர் மற்றும் பதிவுலக முன்னோடியாக அறியப்படுகிறார். 1994ம்ஆண்டும் தனது வலையுலக பயணத்தை ஆரம்பித்த ஜஸ்டின் ஹால் விடாது தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.அவரது கல்லூரி காலத்தில் இருந்து எழுத தொடங்கிய ஜஸ்டின் 2014வது ஆண்டில் நுழையும் பொழுது வலையுலகில்(links.net) தனது இருபதாவது வருடத்தை அடைந்திருப்பார். 

1994ம் வருடத்தில் பதிவுலகம் இணைய உலகினுள் முழுமையாக காலடி எடுத்து வைத்தது. இந்த வருடத்தில் பலஅமெரிக்கர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை ஆன்லைன் டைரி மூலம் தொகுக்க ஆரம்பித்திருந்தனர். இந்த ஆன்லைன்டைரியே தற்போது பல வடிவங்களில் பதிவுலகத்தை ஆக்கிரமித்து வருகிறது. 

1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓபன் டைரி ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே ஆயிரம் பயனர்களையும் பலலட்சம் பக்கப் பார்வைகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ம்முடைய கருத்துகளை, அனுபவங்களை இணையத்தில்பதிவு செய்வதை web log என்கிறோம். ஜார்ன் பர்கர் என்னும் அமெரிக்கர் 1997இல் web log என்ற இரு வார்த்தைகளையும்இணைத்து weblog குறிப்பிடத் தொடங்கினார். பின் பீட்டர் மேர்ஹோல்ஸ் என்னும் அமெரிக்கர் 1999 வருடம் weblog என்பதைஇரண்டாக உடைத்து we blog என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார். பீட்டர் மூலமே ப்ளாக் என்னும் வார்த்தைநமக்கும் ஆங்கிலத்திற்கும் கிடைத்தது. பின் அதே 99ம் வருடம் ஈவன் வில்லியம்ஸ் "பிளாக்கர்" என்னும் வார்த்தையைபயன்படுத்தத் தொடங்கினார். நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிளாக்கரை உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவரும்இவரது சகாவான மேக் ஹரிகலுமே. 

பிளாக்கர் வரலாறு

வன் வில்லியம்ஸ், மேக் ஹரிகல் இந்த இருவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமான பைரா லேப்ஸ் (PYRA LABS) மூலம்1999ம் ஆண்டு பிளாக்கரை இணைய உலகினுள் உலவ விட்டனர். பிளாக்கர் தனது சேவையை இலவசமாகவே தன்பயனர்களுக்கு வழங்கியது. 2001ம் வருடம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலின் போதும், 2002ம் வருடம் நடைபெற்ற ஈராக்போரின் போதும் பலதரப்பட்ட மக்களால் பிளாக்கரும் மற்ற வலைசேவைகளும் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டன.பதிவுலகின் சிறப்பான வளர்ச்சிக்கு இந்த இரு நிகழ்வுகளும் மிக முக்கிய காரணியாக கருதப்படுகின்றன. உடனுக்குடனானசெய்திகளை ஊடங்களை விட பதிவுலகம் மிக வேகமாக வழங்கத் தொடங்கியதும், நடுநிலையான கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டதுமே பதிவுலகம் பலராலும் கவனிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 

Jorn Barger
ந்நேரத்தில் பிளாக்கர் தளத்தின் இலவசம் என்னும் வார்த்தை மிக அதிக பயனர்களை குறைந்த காலத்தில் பெற்றுத்தந்துவிட்டது. இலவசத்தையும் மீறி பிளாக்கர் தளம் உபயோகம் செய்வதற்கு மிக எளிமையாக இருந்தது என்பதே அதன் முதல்வெற்றிக்கு காரணம். 

திகமான பயனர்களை சமாளிக்க முடியாத பைரா லேப்ஸ் தடுமாறத் தொடங்கியது. "பிளாக்கர் தளத்தின் கட்டுமானசெலவினை கருத்தில் கொண்டு அதற்கு நன்கொடை வழங்க தயாராக இருக்கும் பயனர்கள் நன்கொடை அளிக்கலாம்" என்றுவிளம்பரம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். இருந்தும் அவர்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பல மாதங்கள் சம்பளம்பெறாமல் உழைத்துக் கொண்டிருந்தனர் பைரா லாப்சின் ஊழியர்கள். இறுதியில் 2003ம் ஆண்டு பிளாக்கரை கூகிள்நிறுவனத்திடம் விற்றுவிட்டு ஈவன் வில்லியம்ஸ் அதன் பொறுப்புகளில் இருந்து மொத்தமாக விலகிக் கொண்டார்.

கூகிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலமும், பிளாக்கர் தளத்தின் எளிதான கட்டுமானமும் ஒன்றிணைய பிளாக்கர் இன்னும்வேகமாக உருமாற்றம் பெறத் தொடங்கியது. 

மே 9 2004 - கூகிள் நிறுவனம், பிளாக்கர் தளத்தை பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தினர். பதிவுலகின் தொடக்ககாலத்தில், ஒரு பயனர் தான் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த தானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ள வேண்டும். கூகிள்இதை மாற்றி அமைத்தது. கட்டுகோப்பான கோட்பாடுகள் அடங்கிய பல டெம்ப்ளட்களை இலவசமாக தன் பயனருக்குவழங்கியது. பதிவுகளை சேமிக்கும் அமைப்பை இன்னும் சிறப்பாக மற்றும் எளிமையாக மாற்றி அமைத்தது. மின்னஞ்சல் மூலம்பதிவுகள் மற்றும் பின்னூட்டம் இடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. 

ஆகஸ்ட் 14 2006 - பிளாக்கரின் முதல் பீட்டா வெர்சனை வெளியிட்டது. பீட்டா என்பதை சோதனை ஓட்டம் என்றும்குறிப்பிடலாம். இந்த பீட்டா ஓட்டத்திற்கு இன்வடார் என்று பெயரிட்டது கூகிள். மேலும் 2007ம் வருடம் முழுமையான பதிப்பைதனது பயனர்களுக்கு வழங்கியது கூகிள் நிறுவனம். அதில் ஆங்கிலம் தவிர்த்து மேலும் சில மொழிகளையும் பயன்பாட்டுக்குஅளித்தது. 

பதிவுகளுக்கான லேபில்கள், டெம்ப்ளேட் டிசைன் செய்யும் பொழுது பயன்படுத்தும் DRAG & DROP, அனுமதி பெற்ற நபர்களைமட்டும் வலைப்பூவினுள் அனுமதிக்கும் வசதி( PRIVATE BLOG) என்று பல புதிய வசதிகளை 2007ம் ஆண்டு வெளியிட்ட தனதுபுதிய பதிப்பில் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது. 

செப்டம்பர் 2009 - பிளாக்கரின் பத்தாவது ஆண்டு விழாவிற்கு தன்னை தயார்படுத்தியது கூகிள். இந்த விழாவின் பொழுதுபிளாக்கரில் இன்னும் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்தது. இந்நேரத்தில் கூகிள் பிக்காசா என்னும் புகைப்பட கோப்புகளைகையாளும் சேவையை தன்னுடன் இணைத்திருந்தது. இதனால் பிளாக்கரில் புகைப்படங்களை கையாளும் வசதிமேம்படுத்தப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா, உங்கள் பதிவுகளில் இணைக்கப்படும் அனைத்து படங்களும் பிக்காசா மூலமேமுன்பு சேமித்து வைக்கப்பட்டது என்று?
  • நீங்கள் இருக்கும் இடத்தை குறிக்க உதவும் கூகிள் மேப் (Google Map) வசதி இணைக்கப்பட்டது. 
  • பதிவிடும் நேரம் பற்றி பிறர் அறிந்து கொள்ளும் வசதி எற்படுத்தப்பட்டது. 
  • பதிவை பதிவிடுவதற்கு முன் முன்னோட்டம் (PREVIEW) பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • தமிழ் உட்பட 52 மொழிகள் பிளாக்கர் உடன் இணைக்கப்பட்டது. 

ஒரு வலைப்பூவில் ஒரே ஒருவர் தான் ஆசிரியராக இருக்க முடியும் என்ற நிலை மாறி, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரேவலைப்பூவில் ஆசிரியராக செயல்படலாம் என்ற மிக முக்கியமான வசதியையும் பிளாக்கர் ஏற்படுத்திக் கொடுத்தது.
பிளாக்கர் பயனர் கணக்கு பற்றி சில முக்கியமான தகவல்கள் 

உங்களுடைய ஒவ்வொரு கூகிள் கணக்கைக் கொண்டும் உங்களால் 100 வலைப்பூக்கள் உருவாகிக் கொள்ள முடியும். 

முதலில் உங்களால் 2000 லேபிலுக்கு மேல் உபயோகப்படுத்த முடியாது, தற்போது அது 5000 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. ஒருபதிவில் 20 லேபிலுக்கு மேல் உங்களால் உபயோகப்படுத்த முடியாது, மேலும் அந்த லேபில்கள் 150 எழுத்துக்களுக்கு மிகாமல்இருக்க வேண்டும். 

1GB ஆக இருந்த பிளாக்கரின் தகவல் கொள்ளளவு தற்போது 5GB வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு வலைப்பூவில் உங்களால் எத்தனை பதிவுகள் வேண்டுமானலும் பதிவு செய்யப்படலாம். 

உங்கள் பதிவு எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பதிவின் நீளம் அதிகமானால் பக்கங்களின் எண்ணிக்கைஅதிகமாகும். ஒரு பக்கம் 1MB வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு பதிவிற்கு அதிகபட்சமாக உங்களால் இருபதுபக்கங்கள் மட்டுமே எழுத முடியும். 

உங்கள் வலைப்பூவில் 100 ஆசிரியர்களுக்கு மேல் சேர்க்க முடியாது, மேலும் உங்களுடையது கட்டுபடுத்தப்பட்ட வலைபூ(பிரைவேட் ப்ளாக்) என்றால் 100 மெம்பர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். 

பாகிஸ்தான், சீனா உட்பட 13 நாடுகளில் பிளாக்கர் பல சமயங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியப் பதிவுலகின் முன்னோடி அமிட் அகர்வால், இவர் இரண்டு முறை சிறந்த தொழில் நுட்பத்திற்கான இன்டிப்ளாக் விருதைபெற்றுள்ளார் (2006 & 08) 

பிளாக்கர் நண்பன் தளத்தில் நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களைஇங்கே கிளிக்செய்து பார்க்கவும்.

இந்தப் பதிவை கற்போம் மின் இதழில் வெளியிட்ட பிரபு கிருஷ்ணாவுக்கும் என் நன்றிகள்  


Sunday, March 24, 2013

மிக மிக பழமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி ..!!





    மிக மிக பழமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி ..!!

    தயவு சேர்ந்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து                    

    கொள்ளுங்கள்.....



                                 image.jpeg

Friday, March 15, 2013

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே



உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.உதாரணமாக,நாவாய் என்ற தமிழ்ப்பெயரிலிருந்து தான் நேவி என்ற ஆங்கில வார்த்தை உருவானது;இன்றைய இங்கிலாந்து ஒரு நாகரீகமுள்ள நாடாக உருவாகும் முன்பே,தமிழ்நாட்டுடன் வாணிகம் செய்வதை பெருமையாகக் கொண்டிருந்தது இங்கிலாந்து;மெக்காலே கல்வித்திட்டத்தில் இதுபோன்ற நமது பெருமைகள் மறைக்கப்பட்டு,மேல்நாடுகளே மிக உயர்ந்த நாடுகள் என்ற பொய்யானதோற்றத்தை உருவாக்கிவிட்டனர்.