Friday, April 5, 2013

தியானம் செய்யும் முறை, தியானம் செய்யுங்கள் ..


தியானம் செய்யும் முறை.
தியானம் செய்யும் முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

வயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லதுசின் முத்திரை

யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல்

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும்.

முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி
ஜோதியாகத் தெரியும்.)

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்

நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும்.

கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,

பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில்

தியான நேரத்தை 5 நிமிடங்கள்,

பின் 10 நிமிடங்கள்,

பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்

எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்

ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல்

எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,

தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் ..











தியானம் செய்யும் முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

வயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லதுசின் முத்திரை

யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல்

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும்.

முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி
ஜோதியாகத் தெரியும்.)

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்

நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும்.

கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,

பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில்

தியான நேரத்தை 5 நிமிடங்கள்,

பின் 10 நிமிடங்கள்,

பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்

எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்

ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல்

எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,

தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் ..

Courtesy: Facebook

பதிவுலகம்



ன்றைய தினத்தில் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் இணைய தொழில் நுட்பத்திற்கும், அன்றைய நுட்பத்திற்கும்நிறையவே வித்தியாசம் இருந்துள்ளது. இணைய உலகின் அசுர வளர்ச்சி 1990 களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றும் ஒருமுடிவில்லா நிலை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. இணைய வளர்ச்சியும் பதிவுலக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்றுஇணையான ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால், இணைய மற்றும் பதிவுலக வளர்சியை 1990-க்கு முன்-பின் என்று இருவகையாகப் பிரிக்கலாம். 

ன்று நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் பிளாக்கர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் வோர்ட்பிரஸ்இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொடங்கப்பட்ட தளங்கள். "அப்படியென்றால் அதற்கு முன் யாரும் தங்களதுகருத்துக்களை பரிமாறிக் கொள்ளவில்லையா?" என்றொரு கேள்வி எழலாம். 

Tim Berners-Lee


விடை தேட, 1990ம் ஆண்டிற்கு முன் இருந்து நமது பயணத்தை தொடங்குவோம்.

மெரிக்க ராணுவ முகாம்களுக்குள் ரகசிய கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான தேடலில் இருந்து தொடங்குகிறதுஇணையத்தின் வரலாறு. பின் படிப்படியாக அமெரிக்க அரசு அலுவலகங்களும் சில முக்கியமான பல்கலைக் கழகங்களும்இணையம் மூலம் இணைக்கப்பட்டன. இணையத்தின் தேவை வளர வளர, கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள்பயன்பாட்டிற்கும் இணைய சேவை விரிவுபடுதுத்தப்பட்டது. 

1990க்கு முன் யூஸ்நெட்(Usenet) என்னும் இணைய சேவை மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.யூஸ்நெட் என்பது பல சர்வர்கள் இணைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பப் பின்னல். ஒவ்வொரு சர்வரும் மற்றொன்றுடன்இணைக்கபட்டிருக்கும். விளையாட்டு, அரசியல், சினிமா, வர்த்தகம் என்று பல்வேறு வகையான கருத்துப் பரிமாற்றம் நிகழும்தளமாகவே விளங்கியது. ஒவ்வொரு தனிதனி கலந்துரையாடல் பிரிவுகளையும் "நியூஸ் குரூப்" என்றழைக்கிறார்கள். இக்காலசமூக வலைதளங்களின் முன்னோடியாக இந்த யூஸ்நெட்டைக் குறிப்பிடலாம். 

யூஸ்நெட்டில் உங்கள் கருத்தை பதிவு செய்ய அந்த நியூஸ் குரூப் பெயரையும் இணைத்து பதிவிட வேண்டும். உங்கள் சர்வரில்பதியப்படும் கருத்து சிறிது நேரத்தில் மற்ற சர்வர்களையும், உங்கள் நியூஸ் க்ருப்பை சேர்ந்தவர்களையும் சென்று சேரும்.உங்கள் நியூஸ் குரூப்பில் இருப்பவருடன் மட்டுமே உங்களால் கலந்துரையாட முடியும். மேலும் உங்கள் பதிவுகள் முப்பதுநாட்களுக்குப் பின் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

1990 இன் இறுதியில் டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் www என்றறியப்படும் வோர்ல்ட் வைட் வெப் (World Wide Web)என்னும்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்கிய இணைய வளர்ச்சி இன்றளவும்அதே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இவருடைய மற்ற கண்டுபிடிப்புகளான HTTP, HTMLமற்றும் XML போன்றவை இணைய கட்டமைப்பின் மிக முக்கியமான தூண்கள். 

Justin Hall
ஸ்டின் ஹால் என்னும் அமெரிக்கர் தான் உலகின் முதல் பதிவர் மற்றும் பதிவுலக முன்னோடியாக அறியப்படுகிறார். 1994ம்ஆண்டும் தனது வலையுலக பயணத்தை ஆரம்பித்த ஜஸ்டின் ஹால் விடாது தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.அவரது கல்லூரி காலத்தில் இருந்து எழுத தொடங்கிய ஜஸ்டின் 2014வது ஆண்டில் நுழையும் பொழுது வலையுலகில்(links.net) தனது இருபதாவது வருடத்தை அடைந்திருப்பார். 

1994ம் வருடத்தில் பதிவுலகம் இணைய உலகினுள் முழுமையாக காலடி எடுத்து வைத்தது. இந்த வருடத்தில் பலஅமெரிக்கர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை ஆன்லைன் டைரி மூலம் தொகுக்க ஆரம்பித்திருந்தனர். இந்த ஆன்லைன்டைரியே தற்போது பல வடிவங்களில் பதிவுலகத்தை ஆக்கிரமித்து வருகிறது. 

1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓபன் டைரி ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே ஆயிரம் பயனர்களையும் பலலட்சம் பக்கப் பார்வைகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ம்முடைய கருத்துகளை, அனுபவங்களை இணையத்தில்பதிவு செய்வதை web log என்கிறோம். ஜார்ன் பர்கர் என்னும் அமெரிக்கர் 1997இல் web log என்ற இரு வார்த்தைகளையும்இணைத்து weblog குறிப்பிடத் தொடங்கினார். பின் பீட்டர் மேர்ஹோல்ஸ் என்னும் அமெரிக்கர் 1999 வருடம் weblog என்பதைஇரண்டாக உடைத்து we blog என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார். பீட்டர் மூலமே ப்ளாக் என்னும் வார்த்தைநமக்கும் ஆங்கிலத்திற்கும் கிடைத்தது. பின் அதே 99ம் வருடம் ஈவன் வில்லியம்ஸ் "பிளாக்கர்" என்னும் வார்த்தையைபயன்படுத்தத் தொடங்கினார். நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிளாக்கரை உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவரும்இவரது சகாவான மேக் ஹரிகலுமே. 

பிளாக்கர் வரலாறு

வன் வில்லியம்ஸ், மேக் ஹரிகல் இந்த இருவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமான பைரா லேப்ஸ் (PYRA LABS) மூலம்1999ம் ஆண்டு பிளாக்கரை இணைய உலகினுள் உலவ விட்டனர். பிளாக்கர் தனது சேவையை இலவசமாகவே தன்பயனர்களுக்கு வழங்கியது. 2001ம் வருடம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலின் போதும், 2002ம் வருடம் நடைபெற்ற ஈராக்போரின் போதும் பலதரப்பட்ட மக்களால் பிளாக்கரும் மற்ற வலைசேவைகளும் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டன.பதிவுலகின் சிறப்பான வளர்ச்சிக்கு இந்த இரு நிகழ்வுகளும் மிக முக்கிய காரணியாக கருதப்படுகின்றன. உடனுக்குடனானசெய்திகளை ஊடங்களை விட பதிவுலகம் மிக வேகமாக வழங்கத் தொடங்கியதும், நடுநிலையான கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டதுமே பதிவுலகம் பலராலும் கவனிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 

Jorn Barger
ந்நேரத்தில் பிளாக்கர் தளத்தின் இலவசம் என்னும் வார்த்தை மிக அதிக பயனர்களை குறைந்த காலத்தில் பெற்றுத்தந்துவிட்டது. இலவசத்தையும் மீறி பிளாக்கர் தளம் உபயோகம் செய்வதற்கு மிக எளிமையாக இருந்தது என்பதே அதன் முதல்வெற்றிக்கு காரணம். 

திகமான பயனர்களை சமாளிக்க முடியாத பைரா லேப்ஸ் தடுமாறத் தொடங்கியது. "பிளாக்கர் தளத்தின் கட்டுமானசெலவினை கருத்தில் கொண்டு அதற்கு நன்கொடை வழங்க தயாராக இருக்கும் பயனர்கள் நன்கொடை அளிக்கலாம்" என்றுவிளம்பரம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். இருந்தும் அவர்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பல மாதங்கள் சம்பளம்பெறாமல் உழைத்துக் கொண்டிருந்தனர் பைரா லாப்சின் ஊழியர்கள். இறுதியில் 2003ம் ஆண்டு பிளாக்கரை கூகிள்நிறுவனத்திடம் விற்றுவிட்டு ஈவன் வில்லியம்ஸ் அதன் பொறுப்புகளில் இருந்து மொத்தமாக விலகிக் கொண்டார்.

கூகிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலமும், பிளாக்கர் தளத்தின் எளிதான கட்டுமானமும் ஒன்றிணைய பிளாக்கர் இன்னும்வேகமாக உருமாற்றம் பெறத் தொடங்கியது. 

மே 9 2004 - கூகிள் நிறுவனம், பிளாக்கர் தளத்தை பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தினர். பதிவுலகின் தொடக்ககாலத்தில், ஒரு பயனர் தான் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த தானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ள வேண்டும். கூகிள்இதை மாற்றி அமைத்தது. கட்டுகோப்பான கோட்பாடுகள் அடங்கிய பல டெம்ப்ளட்களை இலவசமாக தன் பயனருக்குவழங்கியது. பதிவுகளை சேமிக்கும் அமைப்பை இன்னும் சிறப்பாக மற்றும் எளிமையாக மாற்றி அமைத்தது. மின்னஞ்சல் மூலம்பதிவுகள் மற்றும் பின்னூட்டம் இடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. 

ஆகஸ்ட் 14 2006 - பிளாக்கரின் முதல் பீட்டா வெர்சனை வெளியிட்டது. பீட்டா என்பதை சோதனை ஓட்டம் என்றும்குறிப்பிடலாம். இந்த பீட்டா ஓட்டத்திற்கு இன்வடார் என்று பெயரிட்டது கூகிள். மேலும் 2007ம் வருடம் முழுமையான பதிப்பைதனது பயனர்களுக்கு வழங்கியது கூகிள் நிறுவனம். அதில் ஆங்கிலம் தவிர்த்து மேலும் சில மொழிகளையும் பயன்பாட்டுக்குஅளித்தது. 

பதிவுகளுக்கான லேபில்கள், டெம்ப்ளேட் டிசைன் செய்யும் பொழுது பயன்படுத்தும் DRAG & DROP, அனுமதி பெற்ற நபர்களைமட்டும் வலைப்பூவினுள் அனுமதிக்கும் வசதி( PRIVATE BLOG) என்று பல புதிய வசதிகளை 2007ம் ஆண்டு வெளியிட்ட தனதுபுதிய பதிப்பில் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது. 

செப்டம்பர் 2009 - பிளாக்கரின் பத்தாவது ஆண்டு விழாவிற்கு தன்னை தயார்படுத்தியது கூகிள். இந்த விழாவின் பொழுதுபிளாக்கரில் இன்னும் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்தது. இந்நேரத்தில் கூகிள் பிக்காசா என்னும் புகைப்பட கோப்புகளைகையாளும் சேவையை தன்னுடன் இணைத்திருந்தது. இதனால் பிளாக்கரில் புகைப்படங்களை கையாளும் வசதிமேம்படுத்தப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா, உங்கள் பதிவுகளில் இணைக்கப்படும் அனைத்து படங்களும் பிக்காசா மூலமேமுன்பு சேமித்து வைக்கப்பட்டது என்று?
  • நீங்கள் இருக்கும் இடத்தை குறிக்க உதவும் கூகிள் மேப் (Google Map) வசதி இணைக்கப்பட்டது. 
  • பதிவிடும் நேரம் பற்றி பிறர் அறிந்து கொள்ளும் வசதி எற்படுத்தப்பட்டது. 
  • பதிவை பதிவிடுவதற்கு முன் முன்னோட்டம் (PREVIEW) பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • தமிழ் உட்பட 52 மொழிகள் பிளாக்கர் உடன் இணைக்கப்பட்டது. 

ஒரு வலைப்பூவில் ஒரே ஒருவர் தான் ஆசிரியராக இருக்க முடியும் என்ற நிலை மாறி, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரேவலைப்பூவில் ஆசிரியராக செயல்படலாம் என்ற மிக முக்கியமான வசதியையும் பிளாக்கர் ஏற்படுத்திக் கொடுத்தது.
பிளாக்கர் பயனர் கணக்கு பற்றி சில முக்கியமான தகவல்கள் 

உங்களுடைய ஒவ்வொரு கூகிள் கணக்கைக் கொண்டும் உங்களால் 100 வலைப்பூக்கள் உருவாகிக் கொள்ள முடியும். 

முதலில் உங்களால் 2000 லேபிலுக்கு மேல் உபயோகப்படுத்த முடியாது, தற்போது அது 5000 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. ஒருபதிவில் 20 லேபிலுக்கு மேல் உங்களால் உபயோகப்படுத்த முடியாது, மேலும் அந்த லேபில்கள் 150 எழுத்துக்களுக்கு மிகாமல்இருக்க வேண்டும். 

1GB ஆக இருந்த பிளாக்கரின் தகவல் கொள்ளளவு தற்போது 5GB வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு வலைப்பூவில் உங்களால் எத்தனை பதிவுகள் வேண்டுமானலும் பதிவு செய்யப்படலாம். 

உங்கள் பதிவு எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பதிவின் நீளம் அதிகமானால் பக்கங்களின் எண்ணிக்கைஅதிகமாகும். ஒரு பக்கம் 1MB வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு பதிவிற்கு அதிகபட்சமாக உங்களால் இருபதுபக்கங்கள் மட்டுமே எழுத முடியும். 

உங்கள் வலைப்பூவில் 100 ஆசிரியர்களுக்கு மேல் சேர்க்க முடியாது, மேலும் உங்களுடையது கட்டுபடுத்தப்பட்ட வலைபூ(பிரைவேட் ப்ளாக்) என்றால் 100 மெம்பர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். 

பாகிஸ்தான், சீனா உட்பட 13 நாடுகளில் பிளாக்கர் பல சமயங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியப் பதிவுலகின் முன்னோடி அமிட் அகர்வால், இவர் இரண்டு முறை சிறந்த தொழில் நுட்பத்திற்கான இன்டிப்ளாக் விருதைபெற்றுள்ளார் (2006 & 08) 

பிளாக்கர் நண்பன் தளத்தில் நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களைஇங்கே கிளிக்செய்து பார்க்கவும்.

இந்தப் பதிவை கற்போம் மின் இதழில் வெளியிட்ட பிரபு கிருஷ்ணாவுக்கும் என் நன்றிகள்